Sunday, 25 September 2016

எங்கள் ஈழ நாட்டியப் பேராசிரியர்

எனது ஆசானை பற்றி சில துளிகள்...!

இன்னியம் முலம் அறிமுகமாகிய எனது பெரும் பதிப்புக்குரிய ஈழத்தின் கிழக்கு பல்கலைக்கழக முன்னால் கலை கலாச்சார பீடாதிபதியான திரு.பலசுகுமார் அவர்கள் எனக்கும் என் சக மணவர்களுக்கும் ஆசானாக கிடைத்தது நாங்கள் செய்த பெரும் பாக்கியமாக கருதுவதோடு அவரது மணிவிழா மலரில் அவர் இன்னியத்துக்கு ஆற்றிய பெரும் பணி பற்றி கூற சந்தர்ப்பம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழர் பரம்பரிய கலையான ஈழநாட்டித்தை அழிந்து போக விடாமல் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற என் போன்ற மாணவர்களை இனணத்து கலையினை கற்பிக்கிறார்.

அந்த வகையில் நோர்வே வந்த போலுது என்னையும் இனம் கண்டு இக்கலையினை கற்பித்தார்.
இவ்வாறு தமிழர்கள் வாழ்கின்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சிரமம் பாராது சென்று பொறுமையுடனும், கலை பக்த்தியுடன் கற்பிக்கின்றார். இவர் இக்கலைக்கு கிடைத்த அரும் பொக்கிஷமாகும்.

இவரை நான் ஈழநாட்டியமான இன்னியத்தின் அஅடையாளமாகக் கருதுகின்றேன். அத்துடன் மணிவிழா காணும் எமது ஆசானை நானும் எனது நோர்வே வாழ் மாணவர்களும் எமது ஆசான் மேலும் பல விருதுகள் பெற்று உச்சம் அடைய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

- உங்கள் அன்பின் மாணவி

திவ்யா ஶ்ரீநகுலகுமார்.
                         நோர்வே 

No comments:

Post a Comment