Sunday, 25 September 2016

எங்கள் ஆசான்

சுகுமார் Sirக்கு மணிவிழா வாழ்த்துக்களோடு அவரோடு பழகக் கிடைத்த அனுபவத்தை பகிர வாய்ப்புக்கிடைத்ததில் மகிழ்ச்சி. சுகுமார் Sir ஒரு ஆசான் மட்டுமல்ல. நல்லதொரு மனிதர். வாழ்க்கையில் அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம். மாணவர்களுடன் நட்பாக பழகுபவர். அவரிடம் கற்ற பலர் அவரது குடும்பத்திற்கே பழக்கமானவர்களாகத்தான் இருப்பர். அவரின் முயற்சியிலும் வழிகாட்டலிலும் பல அரங்க ஆற்றுகைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக குறிஞ்சிப் பாட்டு , சர்வோதயத்தில் நிகழ்த்திய நாட்டுப்புற பாடல்கள் என பலவற்றைக் குறிப்பிடலாம். வெளிக்கள ஆய்வுக்காக சேனை ஊருக்குச் சென்று அங்கு சடங்கிலிருந்து நாடகம் தோன்றியது என்ற கோட்பாட்டை கல்வி சார் விடயமாக அனுபவரீதியாக அறிந்ததோடு, ஊரின் முறைகள் , உறவுகளின் பாசம் , உணவுமுறைகள் என்று கல்வி சாரா பலவற்றை அறிந்துணர உதவியது என்றால் அது மிகையில்லை. மற்றும் அவரின் குடும்பத்தோடு நெருங்கிப்பழகக் கிடைத்த அனுபவத்திலிருந்து அன்பான வாழ்க்கை, விட்டுக்கொடுத்து வாழ்வது, வாழ்வில் ஏற்படும் தாங்கமுடியாத பிரிவின் போது எவ்வாறு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, கணவன் மனைவி ஒருவரின் வளர்ச்சியில் மற்றவர் எவ்வாறு உதவிபுரிந்து முன்னேறலாம் என்ற பல விடயங்களை அனுபவ ரீதியாக பார்த்தறியக் கிடைத்தமை பலருக்கு கிடைக்காத ஒன்று. எதனையும் Positive ஆக எடுத்துச் செயற்படுவது சுகுமார் Sir இன் சிறப்பு.

பாவனி சிவகுமரன்
கனடா

No comments:

Post a Comment